Friday, December 12, 2008

486. தீவிரவாதம் சார்ந்த கேள்விகள் - டைம்ஸ் நாளிதழின் மக்கள் சர்வே

பாகிஸ்தான் அரசு மும்பைத் தாக்குதலுக்கு ஆதரவு அளித்ததா என்ற கேள்விக்கு, டைம்ஸ் சர்வேயில் 88% மக்கள் ஆம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

மற்ற சில கேள்விகளும், சர்வே முடிவுகளும்: ஒரு பார்வை

1. உள்நாட்டு பாதுகாப்பை ராணுவம் அல்லது ஒரு ஃபெடரல் அமைப்பு ஏற்க வேண்டுமா ?

ஆம் - 77 %

இல்லை - 18%

2. பாகிஸ்தானுடன் அனைத்து வகை உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டுமா ?

ஆம் - 73% (அதாவது கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பேர், இதே கருத்தை எனது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன்!)

இல்லை - 25%

3. இந்தியாவின் மற்ற இடங்களின் அமைதிக்காக காஷ்மீரத்தை தாரை வார்க்க வேண்டுமா ?

இல்லை - 76% (காஷ்மீர் இந்தியா வசம் இருக்கத் தான் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளார்கள்!)

ஆம் - 24%

4. வளர்ந்த நாடுகளின் (இஸ்லாமிய நாடுகளை நோக்கிய) தவறான கொள்கைகளின் விளைவால் இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதா ?

ஆம் - 61%

இல்லை - 35%

5. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழிக்க வேண்டுமா ?

ஆம் - 69% (இப்படி அழிப்பதால், பெரிய அளவில் போர் மூண்டு விடும், பாகிஸ்தான் நம் மீது அணுகுண்டு வீசி விடும் என்று பெருவாரியான மக்கள் நம்பவில்லை, அஞ்சவும் இல்லை என்பது கவனிக்க வேண்டியது!)

இல்லை - 26% (இவர்கள் சற்று பயந்தவர்கள் :-) )

மேலே விடுபட்ட கேள்விகளுக்கான சர்வே முடிவுகளை (நகர வாரியாகவும் சதவிகிதம் தரப்பட்டுள்ளது) கீழே உள்ள படங்களில் காணலாம்.



நன்றி: டைம்ஸ் ஆஃப் இண்டியா
.

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test..

said...

மக்கள் சர்வே பிரயோசனப்படாது.மகேசன் சர்வேதான் இங்கு அரசியலில் முக்கியம்!

suratha/y

said...

உள்ளதைக் கூறுவதில் தப்பில்லையே?


'பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு போர் தொடங்குவது தீர்வல்ல'


முகர்ஜி‍


நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்?
ஏன் 1988இல் இந்திய ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி 10000 மக்களை அழித்தது?



நாங்கள் மெலியவர்கள்!!!

பாகிஸ்தானியர்கள் வலியவர்கள்!!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails